Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கர்நாடக முதல்வராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை, நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட முக்கியத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து மாநில அமைச்சரவை குறித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து பிரதமர் மோடியை சந்தித்து பசவராஜ் ஆசி பெற்றார். இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘கர்நாடகாவில் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு நல் லாட்சி வழங்கும்படி பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். இதே போல அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணையாக இருக்கும் என உறுதி அளித்தனர். அமைச்சரவை குறித்து மேலிடத் தலைவர்களுடன் பேசியுள்ளேன். அமைச்சரவை பட்டியல் விவகாரத்தில் மேலிடம் விரைவில் முடிவெடுக்கும். இன் னும் 3 நாட்களில் பதவியேற்பு நடக்க வாய்ப்புள்ளது'' என்றார்.